அடுத்தடுத்து 3 சகோதரிகளை உயிர்போகும் வரை குத்தி கொலை செய்த அண்ணன்!
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து தனது மூன்று சகோதரிகளை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்திரயான்குட்டா பகுதியில் அகமது இஸ்மாயில் என்ற நபர் தனது சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் இரண்டு பேரை குத்தினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு சகோதரியும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து மைலாப்பூர் பகுதியில் வசிக்கும் இன்னொரு சகோதரியின் வீட்டிற்கு சென்று அங்கே அவரைக் குத்திக் கொலை செய்தான். கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






