திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது.வரவேற்கத்தக்கது.அடுத்து தயாநிதி மாறன் in waiting list? என ஹெச்.ராஜா நையாண்டி !!!

ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை இன்று காலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் திடீரென கைது செய்தனர்.

ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கைது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது.வரவேற்கத்தக்கது.அடுத்து தயாநிதி மாறன் in waiting list? என நையாண்டியாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply