ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இன்று இரவு 8 மணிக்கு மோடியின் உரையில் தெரிய வரும் !!!

பொதுமுடக்கம் மே 17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை !!!

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் 97 பேருக்கும்,செங்கல்பட்டில் 90 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூரில் 33 , திருவண்ணாமலையில் 10 ,காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், மதுரை,ராமநாதபுரத்தில் தலா நால்வருக்கும்,தஞ்சை மற்றும் தூத்துக்குடியில் தலா 3 பேருக்கும்,தர்மபுரியில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர்,ராணிப்பேட்டை,வேலூர்,விருதுநகரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை 3 ஆம் நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.

 

பொதுமுடக்கம் மே 17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 4 ஆம் முறையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? என இன்று இரவு பிரதமர் மோடியின் உரையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.


Leave a Reply