திருநங்கைகளுக்காக முதன்முறையாக மருத்துவமனை
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திருநங்கைகளின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் விதமாக முதல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. பிஎல்எஸ் மருத்துவமனையின் வளாகத்தில் திருநங்கைகளுக்காக அண்டர் என்ற பெயரில் மாதத்திற்கு இரண்டு முறை பிரத்யேக மருத்துவமனை செய்யப்படும்.
அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பிஎல்எஸ் அரசு மருத்துவமனை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் திருநங்கைகள் மற்றவர்களை போல நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும் என அமெரிக்கத் துணைத் தூதரக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




