மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொய்களை பரப்புக்கின்றனர்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொய்களை பரப்பி குழப்பங்களை விளைவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைவராக நட்டா தேர்வானதையடுத்து டெல்லியில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் எதிர்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

 

பாஜகவினர் பொதுமக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்ற அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்கொண்ட சவால்களுக்கு மேல் எதிர்காலத்தில் பாஜக அதிக சவால்களை சந்திக்க நேரிடும் என்றார்.

 

பாஜக எந்த தவறும் செய்யவில்லை என்பதைவிட மக்கள் ஆதரவு உள்ளது என்பதே எதிர்கட்சிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் மோடி கூறினார். பாஜக மீதும், அரசு மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது என்று மோடி தெரிவித்தார்.


Leave a Reply