அனைத்து ஊழியர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்த கூடுதல் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான தேவைகளை உடனுக்குடன் சரி செய்த மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

 

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை சிஎல்சி பள்ளியில் நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரிகள் முதல் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான சிறு சிறு தேவைகளையும் கேட்டு அறிவதும், அவற்றை சரி செய்வதுமாக கூடுதல் ஆட்சியர் பிரியங்கா சுற்றிச் சுழன்று பணி செய்தார். இவரின் எளிமை அனைவரையும் கவர்ந்தது.


Leave a Reply