இந்திய அரசு மீது மம்தாவுக்கு நம்பிக்கை இல்லையா? – நிர்மலா சீதாராமன்

இந்திய அரசின் மீது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஐநா கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு எடுக்க மத்திய அரசு தயாரா என மம்தா பானர்ஜி சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் இந்திய அரசு மீது மேற்குவங்க முதலமைச்சருக்கு நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்நாட்டு விவகாரத்தில் மூன்றாம் நபரோ அல்லது சர்வதேச அமைப்பு தலையிட விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

உள்நாட்டை சேர்ந்த விவகாரத்தில் ஐ நா தலையிட வேண்டும் என்ற மம்தாவின் பேச்சு பொறுப்பற்ற செயலை காட்டுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியிருக்கிறார். மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நாட்டு மக்களை மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியிருக்கிறார்.


Leave a Reply