சச்சின் சந்திக்க விரும்பும் அந்த தமிழர் யார்? அப்படி என்ன செய்தார்?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்திக்க பலரும் ஆவலாக உள்ள நிலையில் அவர் ஒருவரை தேடி வருவதாக கூறி இருக்கிறார். வாழ்க்கைப் பயணத்தில் எதேச்சையாக சந்திக்கும் சில பேர் நமது வாழ்வில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திவிடுவர்.

 

அப்படி ஒரு மாற்றத்தை தான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த ஒருவர் ஏற்படுத்தியிருக்கிறார். எனவே அவரை தேடி வருவதாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சென்னைக்கு டெஸ்ட் விளையாட வந்தபோது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போது தேனீர் குடிப்பதற்காக அந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை அழைத்துள்ளார் சச்சின்.தேநீரை கொடுத்த அந்த ஊழியர் சச்சினுடன் கிரிக்கெட் தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு சச்சினும் ஓகே சொல்ல, அவர் அணிந்து விளையாடும் எல் போ கார்டு எனும் முழங்கை உபகரணம் பல சாட்டுகள் அடிப்பதற்கு உகந்ததாக இல்லை என அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

 

இதை சச்சின் விளையாடிய பல வீடியோக்களை பார்த்தபின் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளார். ஹோட்டல் ஊழியரின் ஆலோசனையை பின்பற்றிய சச்சின் முழங்கை கவசத்தில் சில மாற்றங்களை செய்து புதிய உபகரணத்தை வடிவமைத்து விளையாடியுள்ளார். ஊழியரின் ஆலோசனை தனக்கு பெரிதும் உதவியாக இருந்ததாகவும் எனவே அந்த ஊழியரை கண்டறிய உதவுங்கள் எனவும் டுவிட்டர் வாயிலாக சச்சின் கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply