பெண் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குஜராத்தில் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான ஜனார்த்தன சர்மாவின் 2 பெண்களையும் கடத்தி கொடுமைப்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரில் அகமதாபாத் ஆசிரம பொறுப்பாளர் மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்கள்.
இதையடுத்து அவர்கள் இருவரும் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு கடந்த மாதம் 27-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எடுத்து இருவர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அகமதாபாத் நீதிமன்றம் இருவரும் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டது.
மேலும் செய்திகள் :
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!