மேற்கு வங்க மாநிலத்தில் இரட்டை தலைகளுடன் கூடிய பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. கிழக்கும் மிதினாபூரிலுள்ள கிராமத்தில் கருப்பு நிறத்தில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட இரட்டைத்தலை கொண்ட பாம்பு ஒன்று தென்பட்டது.
இந்த பாம்பு அதிக விஷம் கொண்டது என வனத்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த பாம்பு தங்களது அதிர்ஷ்டமாக கருதி அதை கிராம மக்கள் பால் கொடுத்து பராமரித்து வருகின்றனர். வனத்துறையிடம் ஒப்படைக்க கிராமமக்கள் மறுத்துவிட்டனர்.