ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்க தக்க மூதாட்டி, உதவி பொறியாளர் மின்சார வாரியம் அருகில் சென்று கொண்டிருந்தார் .
அப்போது திணையத்தூர் அருகே உள்ள கருங்கவயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் கண்ணன்(31) என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிராமநிர்வாக அலுவலர் ராஜேஸ்(35) அளித்த புகாரின் பேரில் திருவாடானை காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!
தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!
எத்தனை எதிரிகள் வந்தாலும் தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது திமுகதான் - முதல்வர் ஸ்டாலின்






