திருட்டில் ஈடுபட்டதாக இளைஞர்களை கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை கட்டிவைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் இம்ரான் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து அப்பகுதி மக்கள் அவர்களை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் பிடியிலிருந்த இம்ரான் மற்றும் மோகன்ராஜை தங்களிடம் ஒப்படைக்க கூறியுள்ளனர். இதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Leave a Reply