ஒத்த செருப்பு திரைப்படத்தை கொன்றுவிடாதீர்கள்!

ஒத்த செருப்பு திரைப்படத்தை கொன்றுவிடாதீர்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார் .சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் மக்களின் வரவேற்பை பெறும் நேரத்தில் திரைப்படத்தை தியேட்டர்களில் இருந்து எடுப்பது கலைஞனை கொல்வதற்கு சமம் என வேதனை தெரிவித்துள்ளார்.திரை அரங்கில் இருந்து அந்த படத்தை அகற்றுவது ஒரு கலைஞனை கொன்று அதன் மேல் மாலை போடுவதற்கு சமம் என பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.


Leave a Reply