பணியில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கான தமிழக முதலமைச்சர் விருதினை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை உள்ளிட்ட 15 பிரிவுகளில் சிறந்து பணியாற்றிய காவலர்களுக்கு 644 பேருக்கு தமிழக அரசின் காவலர் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.சென்னை பெருநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியதற்காகவும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு பணமில்லா அபராத பரிவர்த்தனையை அமல்படுத்தியதற்காகவும் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை காவல்துறைக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.