2,213 புதிய பிசிக்ஸ் பரப்பிலான பேருந்துகளும் 500 மின்சார பேருந்துகளும் வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கி 1580 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிஆர்டி என்கிற பன்னாட்டு முகமைக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கடந்த ஆண்டு மார்ச்சில் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களை கொண்டுள்ள இந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 5 ஆயிரத்து 890 கோடி ரூபாய் செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ் 6 தரத்திலான பேருந்துகளையும், 2000 மின்சாரம் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஆயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பிஎஸ் 6 தரத்திலான 2213 புதிய பேருந்துகளும் 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான திட்ட ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும் ஜெர்மன் உணர்ச்சி வங்கிக்கும் இடையே இந்த திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் மின்சார வாகனங்களுக்கான ஏற்று கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் போக்குவரத்து துறையின் செயல்பாட்டினை மேம்படுத்திட மென்பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல் செய்தல் பயணிகள் தகவல் அமைப்பை நிறுவுதல் உலகத் தரத்திலான ஆலோசகர்களின் உதவிகளை பெறுதல் பணம் இல்லாத பயணச்சீட்டு முறை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.