கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் உட்பட தமிழக-கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து இரு மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமாக புதன்கிழமை திருவனந்தபுரம் செல்ல உள்ளார். அவருடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் தலைமைச் செயலாளர் உட்பட துறை அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.

 

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உள்ளனர். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை முடிந்தபின்பு புதன்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.


Leave a Reply