மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

மின் கசிவால் ஏற்படும் உயிர் பணிகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார் .கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் இன்று பார்வையிட்டார். கொளத்தூர் ஜவஹர்லல் பகுதியில் உள்ள 8 பூங்காக்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். பல்லவன் சாலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகின்றன என்றார்.


Leave a Reply