இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்த போதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியது அனைவரிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்த போதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியது அனைவரிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும்,பேட்டிங்கில் மிடில் ஆடர் வரிசையில் சரியான தேர்வு இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது என்றார்.
இதன் வெளிப்பாடு என்பது மக்களின் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியில் தெரிய வந்ததாகவும் கூறினார்.தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது என்று கூறிய அவர்,முடிவை எடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உள்ளதாகவும் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளை வெற்றியை வசமாக்கியவர் தோனி என்று தெரிவித்தார். தோனியின் ஓய்வு குறித்து தேர்வு குழுவின் தலைமை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.
அதே சமயம் விக்கெட் கீப்பருக்கான அடுத்த வீரராக ரிஷப் பந்த்க்கு அதிகமான வாய்புகள் கொடுக்கபடுவது இளம் வீரர்களை அணியில் வரவேற்கும் விதமாக உள்ளதாகவும், உலக கோப்பை அணி தேர்வு அனைத்து மட்டத்திலும் விமர்சனம் செய்யப்பட்டது உண்மை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்,இந்திய அணிக்கான கேப்டன் மாற்றம் தற்போதைக்கு தேவையில்லை என்றும் கோலி சிறப்பாகவே செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.தொடர்ந்து தமிழகம் மற்றும் இந்திய அளவில் வீரர்கள் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லாமலே நடைபெற்று வருவதாகவும் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.