பசு பாதுகாப்பு பெயரில் நடைபெறும் ஜனநாயக படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் இராமநாதபுரம் சந்தை திடல் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் முன்னிலை வகித்தார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ.அப்பாஸ் வரவேற்றார். கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.செய்யது இபுராஹிம் கண்டன உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது கண்டன உரையாற்றினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!






