பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் இனி எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் பேசிய நிர்மலா சீதாராமன் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.இனி இந்த தேர்வுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும், தேர்வர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து தேர்வு எழுத முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






