ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா தோள்பட்டையில் காயம் அடைந்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் மே மாதம் நடக்கும் உலககோப்பை போட்டியில் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்ற நிலையில் காயம் அடைந்ததால் கிரிக்கெட் வாரியம் கவலை அடைந்தது.
காயத்தின் தன்மை குறித்து பும்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறும்போது, பும்ராவுக்கு தோள்பட்டையில் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் கவலை கொள்ளும்படியான காயம் இல்லை. கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த அனைத்து ஸ்கேன்களும் பும்ராவுக்கு செய்யப்பட்டது என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!