ஆடி பவுர்ணமி நாளில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சி வைரல்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆடி பவுர்ணமி நாளில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
கிராமத்தில் விவசாய நிலத்தில் இன்று காலை சுமார் ஆறுஅடி நீளமுள்ள பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடனம் ஆடியது. ஆடி பவுர்ணமியன்று பாம்புகள் நடனமாடிய காட்சியை அந்த பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.







