பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 17 வயது சிறுவன்..!
டெல்லியின் வாரகா பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கடந்த 15ஆம் தேதி கழிவுநீர் கால்வாயில் மீட்கப்பட்ட பெண் சடலம் தொடர்பாக 2,700 பேரிடம் விசாரணை நடத்திய தனிப்படையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறுவனை கைது செய்தனர்.
இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தான் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.






