பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் உயிரிழப்பு..!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் உயிருடன் கருகினர். மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தோரின் உடல்கள், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். நாசிக் அவுரங்காபாத் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு சுற்றுலா பேருந்து மற்றொரு வாகனம் மீது மோதியதில் முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.






