இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆகத் திகழ்ந்த யுவராஜ் சிங் ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா..?
India's Yuvraj Singh celebrates his century during the Cricket World Cup match between India and West Indies in Chennai, India, Sunday, March 20, 2011. (AP Photo/Kirsty Wigglesworth)
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆகத் திகழ்ந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து நிலையில் பஞ்சாப் அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த யுவராஜ் சிங் வாய்ப்பு கிடைத்தால் டி-டுவென்டி போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் எனவும் ஓய்வு முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.







