கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை..!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜை மறக்க முடியுமா? அவர் உள்பட 3 பேர் மீது, கடந்த 2013-ல் ஹேமலதா – பாலாஜி கடத்தப்பட்ட வழக்கு, ஈரோடு மகளிர் கோர்ட்டில் 12 ஆண்டுகளாக நடந்துவந்தது.
விசாரணையின்போது, அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறியதால், யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், ஆயுள் தண்டனை பெற்று வருவதால் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.





