காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி குழந்தையும் பிறந்த நிலையில் திருமணம் செய்ய மறுக்கும் இளைஞர்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாடி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்ற இளைஞன் ஒரு துருரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதால் கர்ப்பமான அந்த பெண்ணிற்கு 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
அதன் பின்பும் திருமணம் செய்ய மறுத்து வந்ததோடு மிரட்டல் விடுத்த பொன்னுசாமி மீது கை குழந்தையுடன் சென்ற இளம்பெண் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் பொன்னுசாமியை கைது செய்தனர்.







