லிவிங் உறவில் இருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்..!
பெங்களூருவில் லிவிங்உறவில் இருந்த பெண்ணை தலையணையால் முகத்தை அழுத்திக் கொண்ட கொடூர காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூருவில் ஜீவன் பீமா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு இவரது தோழி சென்ற பொழுது மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இது தொடர்பான விசாரணையில் டெல்லியை சேர்ந்த இளைஞருடன் அவர் லிவிங்கில் விரைவில் இருந்தது தெரிய வந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு கொலையை மறைக்க தற்கொலை செய்தது போல மின்விசிறியால் உடலை தொங்கவிட்டு சென்றதும் தெரிகிறது.





