ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அன்புராஜ் ராதிகா தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராதிகா சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






