பற்றிய வயர்கள்.. பேருந்து அடியில் சிக்கிய இளைஞர்..!
பிரதான சாலையின் குறுக்கே கேபிள் வயர் சிக்கி பைக்கில் சென்ற இளைஞர் விபத்துக்கான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் கல்மண்டபம் சாலையில் நடந்த இந்த விபத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த அசோக் என்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார்.
பாதுகாப்பற்ற முறையில் சாலையின் குறுக்கே தொங்கிய தனியார் இன்டர்நெட் நிறுவனத்திற்கு சொந்தமான கேபிள் ஒயர்கள் இளைஞரின் பைக் சிக்கியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.
சட்டென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த இளைஞர் எதிரே வந்த அரசு பேருந்தின் சக்கரத்திற்குள் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





