12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுமா..?
கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்துவதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மே மாதம் மூன்றாம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அட்டவணை வெளியிட்டு இருந்தது. தற்போது அந்த அட்டவணையில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெறுமா அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் தமிழகத்தில் கொரொனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் கொரொனா பரவக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.
இதற்கு மத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடத்துவது சாத்தியமா? தொடர்ந்து திட்டமிட்டபடி அதே தேதியில் தேர்தலை நடத்தலாமா அல்லது சில காரணம்மாதங்கள் கழித்து தேர்வு நடத்தலாமா என்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.






