திமுகவினரின் முகத்திரையை கிழிப்போம்: குஷ்பு
மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி தங்களது திட்டம் போல் காட்டிக்கொள்வதாக குஷ்பு விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது.
ஆனால் போலீஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலினிடம் எவ்வித பதிலும் இல்லை என்பதோடு அச்சம்பங்கள் மூடி மறைக்கப்படுகின்றன என்றார். மேலும் இவர்களின் முகத்திரையை கிழித்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.





