முதுமலை வனவிலங்குகளுக்காக சீகூர் ஆற்றில் தண்ணீர் திறப்பு..!
முதுமலை வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சூழலில், வனவிலங்குகளின் தாகத்தைத் தணிக்க உதகை காமராஜர் சாகர் அணையில் இருந்து சீகூர் ஆற்றில் விநாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீரானது, சீகூர் ஆற்றின் வழியாக வாழைத்தோட்டம், மாவனல்லா மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் கடந்து சென்று மோயார் ஆற்றில் கலக்கும்.





