விருத்தாசலம் ஆசிரியர் மீது கத்தியால் தாக்குதல்..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது ஒரு மாணவர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.






