திருப்பூருக்கு உதயநிதி வருகை: பளிச்சிடும் சாலைகள்
திருப்பூருக்கு நாளை மறுநாள் துணை முதல்வர் உதயநிதி வருகையை முன்னிட்டு நகரப் பகுதியில் தூய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அன்று காலை, உடுமலையில் நடைபெறும், கருணாநிதி நூற்றாண்டு விழா நினைவு நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.






