--- --:--:-- --

தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள்..!

8

ந்திர மாநிலம் தடாவில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளில் ஒன்றை இளைஞர் ஒருவர் எடுக்க முயன்ற போது அது வெடித்து சிதறி அவர் படுகாயம் அடைந்தார்.

 

எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் தண்டவாளத்தில் மாலை 6 மணியளவில் வெடி சத்தம் கேட்டு ரயில்வே போலீசார் சென்று பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து இளைஞரொருவர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.

 

அவரை மீட்டு மருத்துவம னைக்கு அனுப்பிய போலீசார் குண்டு வெடித்த இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் துணியால் சுற்றப்பட்ட வெடிக்காத மற்றொரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றியுள்ளனர். சென்னையிலிருந்து விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon