இளையான்குடியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்..!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளையான்குடி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் பொம்மையா சாமி தலைமையில் களமிறங்கிய காவல்துறையினர், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ஜான் முகமது (36), மற்றும் முகம்மது தஸ்லீம் (35) இருவரையும் கைது செய்து 1.5 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.







