10 பைசாவிற்கு பிரியாணி வழங்கிய திருச்சி பிரியாணி கடை..!
திருச்சியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 10 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 10 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடையின் வாசலில் ஏராளமான பொதுமக்கள் கையில் பத்து பைசாவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டதால் மற்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.







