டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை..!
அக்டோபர் 2 தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமாகும். அகிம்சையின் அடையாளமாக மதிக்கப்படும் காந்திக்கு மரியாதை அளிக்கும் வகையில், அன்றைய தினம் மது கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமாகும்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி யாரேனும் மது விற்றது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.






