காந்திக்கு மரியாதை செலுத்திய திருப்பூர் ஆட்சியர்..!
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா காந்தி ஜெயந்தி விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள கதர் அங்காடியில் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விற்பனையையும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.






