மகாராஷ்டிராவில் 8 பேரை அடித்துக் கொன்ற புலி சிக்கியது..!
மகாராஷ்டிராவில் 8 பேரை அடித்துக் கொன்ற புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. சந்திராபூர் அருகே வனப்பகுதியில் வசிக்கும் சுமார் ஆறு வயதான புலி வனத்தை ஒட்டிய கிராமங்களை சேர்ந்த 8 பேரை அடித்துக் கொன்றது 25 கால்நடைகளையும் கொன்றது.
கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை இவ்வளவு உயிர்களை உணவாக்கியது.
புலியை பிடிக்கும் பணிகளில் கடந்த பிப்ரவரி முதல் களம் இறங்கிய வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நடமாடும் இடத்தில் அனைத்து ரக குண்டுகளை வைத்து ஒன்பது மாத முயற்சிகளின் பலனாக இந்த கிராமத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.







