பிரதமரிடம் காதில் இதைதான் கூறினாராம் இஸ்லாமியர்..!
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடியிடம் என்ன பேசினார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவரின் காதருகே சென்று ஏதோ ரகசியமாக பேசுவது போன்று இஸ்லாமியரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதுகுறித்து ஓவைசி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமருடன் பேசிய அந்த நபர் அதிக சல்பிகர் அலி என்பது தெரியவந்துள்ளது.
பிரதமரிடம் பெயர் மற்றும் விருப்பம் குறித்து கேட்டதாகவும் அதற்கு எம்எல்ஏ, கவுன்சிலர் சீட் எதுவும் வேண்டாம் தன்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். பிரதமருடன் பேசிய தருணம் 40 ஆண்டுகள் வரை தனது நினைவில் இருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.






