ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டிய அவசியமில்லை – அமலாக்கத்துறை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது. சிதம்பரம் தற்போது காவலில் இருப்பதால் அவரால் ஆதாரங்களை அளிக்க முடியாது என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. சிதம்பரம் சிறையில் இருக்கும் காலத்திற்குள் பிற தகவல்களை சேகரித்துக் கொள்கிறோம் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இதனை அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.



