அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை..!
யுஜிசி இன் விதிமுறைகளின் படியே கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகளை தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளித்திருப்பதாகவும், ஏஐடிசியிடம் இருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது என்று ஏஐடிசி கூறியதாக அண்ணா பல்கலைக்கழக சூரப்பா தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.







