இரு சக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டு சாகசம் செய்த இளைஞர்..!
திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் பிரகாஷ் பைக்கில் படுத்தவாரு ஓட்டி சாகசம் செய்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.





