திருடர்களை விரட்டிய தெரு நாய்..பல லட்சம் ரூபாய் தப்பியது..!
தெரு நாய்கள் ஒன்று சேர்ந்த விரட்டியதால் திருடர்களின் பிடியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பிய சம்பவம் பெங்களூரில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் சுற்றியவர்கள் அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்பொழுது தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து ஆறு பேர் கொண்ட திருட்டு கும்பலை ஓட ஓட விரட்டியது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் காவலர்கள் இரவு நேரத்தில் ரோந்து வரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





