12 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தூய்மையான கடல்..!
கொரோனா ஊரடங்கிற்கு பின் புதுச்சேரி கடல் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி தூய்மையாக காட்சியளிப்பதாக ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கிற்கு முன் வாரம்தோறும் தன் மாணவர்களிடம் இணைந்து ஆழ்கடலில் இருந்து 150 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வந்த இவர் ஆறு மாதங்களுக்குப் பின் கடலுக்கு சென்ற போது கடந்த 12 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குப்பைகள் இன்றி கடல் நீல வண்ணத்தில் சுத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.







