இரண்டு சாரைப் பாம்புகள் நடனமாடும் காட்சி வைரல்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பத்து நிமிடத்திற்கு மேலாக பாம்புகளின் நடனம் நீடித்தது.
இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து பதிவிட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.







