அசுர வேகத்தில் பறந்து வந்த பெண் மீது மோதிய மணல் லாரி..!
தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்ததில் ஒரு பெண் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். திருவையாறிலிருந்து தஞ்சை நோக்கி மணல் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
நடுக்கடை பகுதியில் சென்ற பொழுது லாரியின் ஸ்டேரிங் உடைந்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் சாலையில் சென்றவர்கள் மீது மோதி சாலையோரம் இருந்த ஜெராக்ஸ் மற்றும் நகை அடகு கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் வீரமணி உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.





