--- --:--:-- --

பர்சை திருட முயன்ற 3 பெண்களை சுற்றி வளைத்த பொது மக்கள்..!

13

தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெண்ணின் பர்சை பிளேடால் அறுத்து பணம் திருட முயன்ற 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீரபாண்டியன்பட்டணம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஆத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் தனது நகையை வைத்து 15 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

 

பின்னர் பணத்தை துணிப்பையில் வைத்தபடி ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தவரை வங்கியில் இருந்து மூன்று பெண்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் துணிப்பையை பிளேடால் அறுத்து பர்சை எடுக்க முயன்றதை கண்டு சப்தமிட்டததால் அங்கிருந்தவர்கள் அந்த பெண்களை மடக்கி பிடித்தனர்.

Leave a Reply

Right Menu Icon